உலகமே அசைஞ்சாலும்.. முதல் 10 ஓவர் காலை எடுத்துடாதீங்க.. இந்திய வீரர்களுக்கு போன மெசேஜ்! என்ன காரணம்?
சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல இந்த செமி பைனல் மாறிவிடும். செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்ற அச்சம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்த முறை செமி பைனலுக்கு 9 முறை தொடர் வெற்றிகளோடு இந்தியா சென்றுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்தை ஒருமுறை இந்தியா இந்த தொடரில் வீழ்த்தியும் விட்டது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை.
இதனால் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணிக்கு ஏகப்பட்ட பிரஷர் உள்ளது. நாக் அவுட் களங்கத்தை துடைக்க வேண்டும், 2019ல் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த களங்கத்தை துடைக்க வேண்டும் என்று இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
இந்திய அணிக்கு போன எச்சரிக்கை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது. அதன்படி மாலை நேரத்தில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்யும் பட்சத்தில் முதல் 10 ஓவர்கள் எதுவும் செய்ய கூடாது. முக்கியமாக டெஸ்ட் மேட்ச் போல மெதுவாக ஆட வேண்டும்.
பிட்சை விட்டு காலை எடுத்து இறங்கி வந்ததெல்லாம் ஆடவே கூடாது. முடிந்த அளவு ஒரே இடத்தில் நின்று ராகுல் டிராவிட் டெஸ்ட் ஆடுவது போல உறுதியாக ஆட வேண்டும். பொதுவாக மும்பை வான்கடே ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம். இங்கே கடல் காற்று மாலை நேரத்தில் வீசும்.
ஏன் முக்கியம்?: இதனால் முதல் இரண்டாவது இன்னிங்சில் 10 ஓவர்கள் பந்து ஸ்விங் ஆகும். மிக மோசமாக பந்து ஸ்டம்பிற்கு வரும். இதன் காரணமாகவே இரண்டாவது இன்னிங்சில் இந்த பிட்சில் ஆடிய அணிகள் எல்லாம் இந்த உலகக் கோப்பையில் மிக கடுமையாக முதல் 10 ஓவர்கள் திணறி உள்ளன. உதாரணமாக இரண்டாவதாக இங்கே பேட்டிங் செய்த ஆண்கள் முதல் பவர் பிளேவில் எடுத்த ரன்கள் பின்வருமாறு.. 67/4, 35/3, 14/6 மற்றும் 52/4.
இதில் ஆஸ்திரேலியா மட்டுமே சரிவில் இருந்து மீண்டு மேக்ஸ்வெல் ஆட்டம் காரணமாக இந்த பிட்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்றது. மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம் பேட்டிங் பிடித்து இங்கே மோசமாக தோல்வி அடைந்துள்ளன. மும்பையில் இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் ஆடியும் நபர்களுக்கு சொல்லப்படும் எச்சரிக்கை கிரிக்கெட் வல்லுனர்கள் மூலம் இந்திய அணிக்கும் சொல்லப்பட்டு உள்ளது.
மாலை நேரத்தில் இரண்டாவது பேட்டிங் ஆடும் பட்சத்தில் முதல் 10 ஓவர்கள் மிக மெதுவாக ஆட வேண்டும். இல்லையென்றால் விக்கெட் வேகமாக விழுந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications