Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி.. கோடிகளை அள்ளிய ரோஹித் சர்மா .. யாருக்கு எவ்வளவு பரிசு?

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி 3வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கும், 2வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கும் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

ind vs nz champions trophy final Rohit Sharma

இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி 3வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும், 2013ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலமாக கங்குலி, தோனிக்கு பின் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற 3வது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் 76 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அதிக ரன்களை விளாசிய நியூசிலாந்து நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. அதேபோல் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கும், 2வது இடம்பிடித்த நியூசிலாந்து அணிக்கும் எவ்வளவு பரிசுத் தொகை அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த கேள்விக்கு ஐசிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.59.90 கோடியாகும். இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகளுக்கும் குறைந்தபட்ச தொகையாக ரூ.1.08 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் சுற்றுடன் வெளியேறிய அணிகளில் 5 மற்றும் 6வது இடம் பிடித்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு தலா ரூ.3.04 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 7 மற்றும் 8 ஆகிய இடங்களை பிடித்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு தலா ரூ.1.21 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு தலா ரூ.4.86 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணிக்கு ரூ.9.72 கோடியும், முதலிடம் பிடித்து அசத்தியுள்ள இந்திய அணிக்கு ரூ.19.45 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை பிசிசிஐ சார்பாக வழங்கப்பட்டது. இதனால் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கும் பிசிசிஐ சார்பாக பரிசுத்தொகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+