Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30 ரன்களுக்கு காலியான டாப் ஆர்டர்.. எடுத்த முடிவில் உறுதியாக நின்ற கம்பீர்.. காப்பாற்றிய 2 வீரர்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் 30 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுத்த முடிவு, மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளது. நம்பர் 5ல் களமிறங்கிய அக்சர் படேல் 61 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்திய அணி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலும் எளிதாக வெற்றிபெற்றது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் எந்தவித சவால்களையும் இந்திய அணிக்கு அளிக்கவில்லை.

ind vs nz Gautam Gambhir Shreyas Iyer champions trophy 2025 2025

டாப் ஆர்டர் காலி

இதனால் நாக் அவுட் போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி சவாலான போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப நியூசிலாந்து அணியுடனான கடைசி லீக் போட்டி அமைந்துள்ளது. ஏனென்றால் டாப் ஆர்டர் வீரர்களான சுப்மன் கில் 2 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

களமிறங்கிய அக்சர் படேல்

இதன் காரணமாக இந்திய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் பிளே ஓவர்களுக்குள் இவ்வளவு விக்கெட்டுகளை இழந்ததால், விக்கெட்டை நிறுத்த வேண்டிய பொறுப்பும் அதே நேரத்தில் ரன் ரேட்டை குறையாமல் பார்த்து கொள்ளும் பொறுப்பு அடுத்த 2 பேட்ஸ்மேன்களின் பணியாக அமைந்தது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இருவரும் களத்தில் இருந்தனர்.

நிதான ஆட்டம்

ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இருவரும் எந்தவித பதற்றமும் இல்லாமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 7வது ஓவரில் தொடங்கி பார்ட்னர்ஷிப்பை சிறிது சிறிதாக கட்டமைத்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கில் இருந்து வெளியேறும் வரை எந்தவித ரிஸ்கையும் எடுக்கவில்லை. அதன்பின் 15 ஓவர்கள் கடந்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் விரைவாக ரன்களை சேர்த்தார்.

அக்சர் படேலும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் பவுண்டரியை அடிக்க, இருவரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை 25 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 75 பந்துகளில் அரைசதத்தை அடிக்க, இன்னொரு பக்கம் அக்சர் படேல் டாட் பால்களுக்கும் சேர்த்து ரன்களை குவிக்க அதிரடி காட்டினார்.

98 ரன்கள்

அக்சர் படேல் அதிரடியாக விளையாட முயற்சிப்பதை அறிந்த சான்ட்னர், ரச்சின் ரவீந்திராவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அதற்கேற்ப அவரை அட்டாக் செய்ய முயன்று அக்சர் படேல் 61 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 98 ரன்களில் உடைந்தது. இருப்பினும் இருவரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கம்பீர் முடிவு

இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிச்சயம் மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனின் அவசியத்தை அறிந்து அக்சர் படேலை நம்பர் 5ல் களமிறக்கி வந்தார். அதற்கான பலம் மிக முக்கியமான நேரத்தில் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. ஏனென்றால் ஓரூர்க், ஜேமிசன், ஹென்ரி உள்ளிட்ட 3 வேகப்பந்துவீச்சாளர்களும் இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன் இருக்கும் போது லைனை பிடிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் இந்திய அணி கம்பேக் கொடுத்ததற்கு கம்பீரின் முடிவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+