பாபர் அசாம் அல்ல.. பாகிஸ்தானின் 2 முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தணும்.. எல்லாமே முகமது ஷமி கைகளில்!
மும்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பார்க்கலாம். பாகிஸ்தான் அணியின் பவுலர்களுக்கும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான ஆட்டமாக இது அமைந்துள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், சாவுத் சக்கீல் ஆகிய இருவரும் அபாயகரமான பேட்ஸ்மேன்களாக உருவாகி இருக்கின்றனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. என்னதான் ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அதிக போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தாலும், இம்முறை பாகிஸ்தான் அணி எழுச்சிபெறும் என்று பெரும்பாலான ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு பாகிஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வியே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் பாகிஸ்தான் அணியின் பவுலர்களுக்கும் இடையிலான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சோதனையாக இருப்பார்கள்.
இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் புதிய பந்தில் ஷாகின் அப்ரிடியின் ஸ்விங்கும், நசீன் ஷாவின் வேரியேஷனும் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் போன்ற ஆட்டக்காரர்களையே சோதிக்கும். அதேபோல் ஹாரிஸ் ராஃப் போன்ற பவுலர்கள் என்ன நேரத்தில் என்ன செய்வார்கள் என்று தெரியாது.
புதிய பந்தில் அவரின் கூடுதல் வேகம் அட்டாக்கிங் ஷாட்களை ஆடக் கூடிய பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். இதனால் பவர் பிளே ஓவர்களில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ரோஹித் சர்மா இந்த போட்டியில் அட்டாக் செய்தாலும், கூடுதல் கவனத்துடன் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பயனை கொடுக்கும்.
ஏனென்றால் 15 ஓவர்களை ரோஹித் சர்மா கடந்துவிட்டாலே, அவரால் எளிதாக 35 ஓவர்கள் வரை களத்தில் நிற்க முடியும். ஒருவேளை அவர் விக்கெட்டை பறிகொடுத்தால் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் 35 ஓவர்கள் வரை களத்தில் நின்று இந்திய அணியின் பேட்டிங்கை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் பவுலிங்கில் தொடக்க வீரர்களை மட்டும் வீழ்த்தி முகமது ஷமி மற்றும் ஹர்சித் ராணா அட்டாக் செய்தாலே போதுமானது. அதன்பின் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் துபாய் மைதானத்தில் போதுமான சேதாரத்தை செய்துவிடுவார்கள். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் சக்கீல் ஆகியோரை கட்டுப்படுத்தினாலே இந்திய அணியால் எளிதாக வீழ்த்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications