Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிட்ச்-ஐ பார்த்து ஷாக்கான கில்! ”அவருக்கு வாய்ப்பு இல்லை" முதல் டெஸ்டில் இந்தியா செய்யும் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியின் பிளேயிங் 11 தேர்வு குறித்து பேசியுள்ளார். நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், பிட்ச் மற்றும் பவுலிங் திட்டம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

யார் அவுட்?

இந்திய அணி எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று, காயம் காரணமாக ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டை ஆடும் லெவனில் சேர்ப்பதுதான். இங்கிலாந்தில் கால் எலும்பு முறிவு காரணமாக ஓய்வுக்குப் பிறகு அவர் அணிக்குத் திரும்பியுள்ளார். துருவ் ஜுரேலின் சமீபத்திய ஃபார்ம், அவர் நிச்சயம் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால், வெளியேற்ற கூடிய ஒரே வீரராக இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இருந்தார். அதற்கேற்ப அவரையும் இந்திய அணி ரிலீஸ் செய்துள்ளது.

IND vs SA 1st Test

கில் பேட்டி

ஆடும் லெவனைப் பற்றி இந்தியா பெருமளவு முடிவு செய்துவிட்டதாகவும், பந்துவீச்சாளர்கள் தேர்வு மட்டுமே இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கில் கூறியுள்ளார். சுப்மன் கில் பேசுகையில், இது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ஆடுகளம் நேற்று இருந்ததில் இருந்து சிறிது வேறுபடுகிறது. நாளை காலை மீண்டும் பார்க்க வேண்டும்.

அதன் பிறகே ஸ்பின்னர்கள் இறுதி செய்வோம், ஏனென்றால் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் ஓரளவுக்கு ஆட்டத்தைத் தீர்மானிக்கப் போகிறார்கள். இந்திய பிளேயிங் லெவனில் ஆல்-ரவுண்டரை விளையாட வைப்பதா அல்லது ஒரு கூடுதல் சுழற்பந்து வீச்சாளரை விளையாட வைப்பதா என்ற கேள்வி எப்போதும் இருக்கும். அதனை நாளை முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர் Vs ஸ்பின்னர்

இந்திய அணியில் அக்‌ஷர் படேல் என்ற மற்றொரு ஆல்-ரவுண்டர் வாய்ப்பு உள்ளது. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர் கடைசியாக 2024-இன் ஆரம்பத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இருப்பினும், இந்தியா தங்கள் வரிசையில் வைத்துள்ள ஆல்-ரவுண்டர்களின் முக்கியத்துவத்தை கில் வலியுறுத்தினார்.

"எங்களிடம் நல்ல பேட்டிங் ஆல்-ரவுண்டர்கள் இருப்பது எங்கள் அதிர்ஷ்டம் - அக்‌ஷராக இருக்கட்டும், வாஷிங்டன் அல்லது ஜடேஜாவாக இருக்கட்டும், அவர்களின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சாதனைகள் சிறப்பாக உள்ளன, குறிப்பாக இந்தியாவில். இது ஒரு விறுவிறுப்பான டெஸ்ட் போட்டியாக இருக்கப் போகிறது. மேலும் அதிக தேர்வுகள் இருப்பது நல்லது" என்று கூறினார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது, இந்திய அணி ஆறு பந்துவீச்சுத் தேர்வுகளுடன் விளையாடியது, இதில் நிதிஷ் குமார் ரெட்டி இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் வழக்கமான மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்.

ஈடன் கார்டன்ஸில் 2019-க்குப் பிறகு முதல் டெஸ்ட்

இந்தியா 2019-இல் பங்களாதேஷுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்த ஐகானிக் மைதானத்தில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த சிவப்புப் பந்து டெஸ்ட் போட்டி 2017-இல் இலங்கை அணிக்கு எதிரான இந்தியாவின் சுற்றுப்பயணத்தின் போது நடந்தது. மறுபுறம், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கடைசியாக ஈடன் கார்டன்ஸில் மோதியது நவம்பர் 1996-இல் ஆகும். அப்போது தென்னாப்பிரிக்கா 329 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடப்படத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+