சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு.. பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத விவகாரம்.. சாடும் மஞ்ச்ரேக்கர்!
கொழும்பு: இந்தியா அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் தவிர்க்கும் நிலைப்பாட்டை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக சாடியுள்ளார். இந்திய வீரர்களின் இந்த போக்கு சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியா போன்ற நமது நாட்டுக்கு இப்படியான நிகழ்வுகள் அழகல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடரின் போதே இப்படியான சர்ச்சைகள் அரங்கேறின.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசியல் மோதலை விளையாட்டின் மூலமாக தணிக்காமல், அதில் எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாக விமர்சனங்கள் அதிகரித்தன. இதனிடையே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, இந்திய அணி வீரர்கள் எங்களுடன் கைகுலுக்க முன் வந்தால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டுமோ, அப்படியே விளையாட வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இருக்கும் நிலைப்பாட்டில் தொடரலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் இந்த நிலைப்பாட்டை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக சாடி இருக்கிறார். இதுதொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், இந்திய அணியின் போக்கு சிறுபிள்ளைத்தனமானது.
இந்தியா போன்ற கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும்நமது நாட்டுக்கு இப்படியான செயல்கள் அழகல்ல. கிரிக்கெட்டை விளையாட்டு உணர்வுடன் மட்டுமே விளையாட வேண்டும். அப்படி இல்லையென்றால், விளையாடாமல் தவிர்த்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து இந்திய ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வருகிறது.
ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு என்பது அனைவரையும் இணைக்க வேண்டுமே தவிர, யாரிடமும் வன்மத்தை விதைக்க கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியுடன் விளையாடக் கூடாது என்று பாகிஸ்தான் அரசு ஒரு நிலைப்பாட்டை கூறியுள்ள சூழலில், ஐசிசியின் எச்சரிக்கையால் மாற்றிக் கொண்டது. இதனால் களத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications