Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு.. பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத விவகாரம்.. சாடும் மஞ்ச்ரேக்கர்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியா அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் தவிர்க்கும் நிலைப்பாட்டை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக சாடியுள்ளார். இந்திய வீரர்களின் இந்த போக்கு சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியா போன்ற நமது நாட்டுக்கு இப்படியான நிகழ்வுகள் அழகல்ல என்றும் விமர்சித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடரின் போதே இப்படியான சர்ச்சைகள் அரங்கேறின.

India vs Pakistan

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசியல் மோதலை விளையாட்டின் மூலமாக தணிக்காமல், அதில் எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாக விமர்சனங்கள் அதிகரித்தன. இதனிடையே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, இந்திய அணி வீரர்கள் எங்களுடன் கைகுலுக்க முன் வந்தால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டுமோ, அப்படியே விளையாட வேண்டும் என்றார்.

இந்த நிலையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இருக்கும் நிலைப்பாட்டில் தொடரலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் இந்த நிலைப்பாட்டை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக சாடி இருக்கிறார். இதுதொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், இந்திய அணியின் போக்கு சிறுபிள்ளைத்தனமானது.

இந்தியா போன்ற கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும்நமது நாட்டுக்கு இப்படியான செயல்கள் அழகல்ல. கிரிக்கெட்டை விளையாட்டு உணர்வுடன் மட்டுமே விளையாட வேண்டும். அப்படி இல்லையென்றால், விளையாடாமல் தவிர்த்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து இந்திய ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வருகிறது.

ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு என்பது அனைவரையும் இணைக்க வேண்டுமே தவிர, யாரிடமும் வன்மத்தை விதைக்க கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியுடன் விளையாடக் கூடாது என்று பாகிஸ்தான் அரசு ஒரு நிலைப்பாட்டை கூறியுள்ள சூழலில், ஐசிசியின் எச்சரிக்கையால் மாற்றிக் கொண்டது. இதனால் களத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+