IPL-ல் வங்கதேச வீரர் இருக்கக்கூடாது! கொல்கத்தா அணிக்கு.. இந்திய கிரிக்கெட் வாரியம் வார்னிங்
டெல்லி: ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஷூர் ரகுமானை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அணியிலிருந்து ரகுமானை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிகெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஷூர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அண்மைய நிலவரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யவும் கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா இந்த தகவலை இந்தியா டுடே-க்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார். முஸ்தஃபிஷூரை முறையாக விடுவிக்க கேகேஆர்-க்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாகவும் சைகியா தெரிவித்திருக்கிறார். "சமீபத்திய சலசலப்புகள் காரணமாக, முஸ்தஃபிஷூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கேகேஆர் உரிமையாளரை பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மாற்று வீரர் கோரப்பட்டால், பிசிசிஐ அதனை அனுமதிக்கும்" என்று சைகியா கூறியுள்ளார்.
முஸ்தஃபிஷூர் ரஹ்மான், கடந்த டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார். இந்த ஏலத்தில் ஒப்பந்தமான ஒரே வங்கதேச வீரர் இவர் மட்டும்தான். ஆரம்பத்தில் கிரிக்கெட் திறனுக்காகவே இவரது தேர்வு கவனம் ஈர்த்தது. எனினும், விரைவில் இது சர்ச்சையாக மாறியது.
வங்கதேசத்தில் சமீபத்தில் இந்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியாவிலிருந்து வலதுசாரி குழுக்களும், பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
முன்னதாக ரகுமானை ஏலத்தில் எடுத்ததற்காக நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாருமான ஷாருக்கானை துரோகி என்று பாஜகவினர் விமர்சித்திருந்தனர். உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் சங்கீத் சோம், "ஒருபுறம் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்; மறுபுறம் ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கப்படுகிறார்கள். தேசத்துரோகி திரைப்பட நடிகர் ஷாருக் கான், வங்கதேச கிரிக்கெட் வீரரான ரஹ்மானை ₹9 கோடிக்கு வாங்கியுள்ளார். இத்தகைய துரோகிகளுக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. இந்த நாட்டின் மக்கள்தான் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள். பணம் இந்த நாட்டிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டீர்கள்" என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஆன்மீக குரு தேவகினந்தன் தாக்கூரும், "வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு, உயிரோடு எரிக்கப்படுவதையும், பெண்கள் தாக்கப்பட்டதையும் அவர் பொருட்படுத்தாமல், தனது அணியில் வங்கதேச வீரர்களைச் சேர்த்திருப்பதை, KKR உரிமையாளரை பிரபலமாக்கிய சனாதன பக்தர்கள் மற்றும் இந்துக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று ஷாருக்கானை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications