கல்வியை விட கிரிக்கெட்டே முக்கியம்.. தேர்வை புறக்கணித்த வைபவ் சூர்யவன்ஷி.. தந்தை சொன்ன வார்த்தை!
மும்பை: இந்திய யு19 வீரர் வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை புறக்கணித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் முடிவுக்கு அவரது தந்தை சஞ்சீவ் ஆதரவு தெரிவித்திருக்கிறார். படிப்பில் கவனம் செலுத்தி இருந்தால், அவரால் கிரிக்கெட்டே விளையாடி இருக்க முடியாது என்றும் சஞ்சீவ் ஆதரவாக பேசி இருக்கிறார்.
அண்மையில் நடந்த யு19 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸ் காரணமாக வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதனிடையே வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டது.

என்னவென்றால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தான். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் கில்லாடியாக இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, படிப்பில் தடுமாறுவது இயல்பு தான். ஆனால் ஊடகங்களும், ரசிகர்களும் வைபவ் சூர்யவன்ஷியின் மதிப்பெண்களை கவனத்தில் கொண்டால், அது சிறுவனாக உள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு மனதளவில் பாதிப்பை உருவாக்கலாம்.
அதற்கேற்ப வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு தேர்வை எழுதுவாரா என்று தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது. ஆனால் வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு தேர்வை எழுதாமல் மொத்தமாக புறக்கணித்திருக்கிறார். இதன் காரணமாக பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அட்வைஸ் கொடுக்க தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் முக்கியம் என்றாலும், அடிப்படை கல்வியும் அவசியம் என்று பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆதரவாக தந்தை சஞ்சீவ் குரல் கொடுத்துள்ளார். அதில் சஞ்சீவ் பேசுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்து நாக்பூரில் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரின் பொதுத்தேர்வு தொடர்பாக ஒரு பில்டப் கொடுக்கப்பட்டு கொண்டே இருந்தது. அதனால் இம்முறை தேர்வை எழுத வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
ஒருவேளை வைபவ் சூர்யவன்ஷி தேர்வுக்கு வந்திருந்தால், அவரால் போதுமான அளவிற்கு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே வைபவ் சூர்யவன்ஷியின் முடிவு சரியானது என்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 3வது வாரத்தில் தொடங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், சிஎஸ்கே, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு அணிகளும் பயிற்சியை தொடங்கிவிட்டனர். கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 252 ரன்களை குவித்தார். இம்முறை ராஜஸ்தான் அணி அவருக்கு முழு சீசனிலும் விளையாட வாய்ப்பு அளிக்கும் என்று கருதப்படுகிறது.
-
மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது எப்படி? கார்த்திக் சர்மா, உர்வில் படேலுக்கு பாடம் எடுத்த தோனி! -
ஐபிஎல் தொடரில் RCB இல்லை? பெயரை மாற்ற புதிய உரிமையாளர்கள் திட்டம்? வந்த திடீர் விளக்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications