ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி வைத்த தரமான ட்விஸ்ட்.. யார் பிளானோ தெரியல.. திடீரென கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நேற்று பெங்களூர் அணி பெரிதாக ஏலம் கேட்கவே இல்லை. ஆனால் இன்று முக்கியமான சில வீரர்களை அந்த அணி ஏலம் எடுத்துள்ளது.
ஆனால் ஆர்சிபி அணி கடைசி வரை முக்கியமான வீரர்களை எடுக்கவில்லை. அந்த அணி கே எல் ராகுலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை கேட்கவில்லை. 14 கோடி ரூபாய்க்கு கிடைத்தும் கூட பெங்களூர் அணி அவரை எடுக்க போகவில்லை. அதேபோல் சாஹலை அந்த அணி எடுக்கவில்லை. இரண்டு முறை மட்டுமே அந்த அணி சாஹலை ஏலம் கேட்டது. அதன்பின் ஏலம் கேட்கவே இல்லை. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இதோடு இல்லாமல் கடந்த சீசன்களில் அந்த அணிக்கு சிறப்பாக ஆடிய அதிக விக்கெட் டேக்கர் முகமது சிராஜை பெங்களூர் அணி மிஸ் செய்துள்ளது. இது போக பண்டை பெங்களூர் அணி எடுத்து இருக்கலாம். ஆனால் அவருக்காக போராடவில்லை. இது போக ஷ்ரேயஸ் ஐயரை எடுக்கவும் போராடவில்லை. அந்த அணியின் செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. பவுலர்களிலும் பெங்களூர் பெரிதாக யாரையும் எடுக்கவில்லை. இதனால் பெங்களூர் அணி கோர் டீமை உருவாக்குவதிலேயே திணறி வந்தது.
நாள் 1க்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் பணப்பையிலும் மீதமுள்ள மொத்தத் தொகை:
மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி
சர்ப்ரைஸ்: இந்த நிலையில்தான் இன்று சர்ப்ரைஸ் ஏலம் ஒன்றை பெங்களூர் அணி எடுத்துள்ளது. அதன்படி புவனேஷ்வர் குமாரை அணியில் எடுத்துள்ளனர். இவரை எடுக்க மற்ற அணிகள் தீவிரமாக போட்டியிட்டன .
அப்போதெல்லாம் பெங்களூர் அணி ஏலம் கேட்கவே இல்லை. 10.50 கோடி ரூபாய் இருந்த போதுதான் அவரை எடுக்க ஏலம் கேட்டன. அப்போது பெங்களூர் அணி அவரை 10.75 கோடி ரூபாய்க்கு கேட்டது.
சர்ப்ரைஸாக திடீரென உள்ளே வந்து பெங்களூர் அணி ஏலம் கேட்டது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதோடு இல்லாமல் அந்த ஏல தொகைக்கு பெங்களூர் அணி அவரை எடுத்தது.
இதன் மூலம் பெங்களூர் அணியின் பவுலிங் கொஞ்சம் பலமாகி உள்ளது. ஏற்கனவே குருனால் பாண்டியா அணியில் எடுக்கப்பட்டு உள்ளார்.
- ஹேசல்வுட்
- புவி
- யாஷ் தயாள்
- ரசிக் சலாம்
- க்ருணால் பாண்டியா
- சுயாஷ் சர்மா என்று பெங்களூர் அணியில் முக்கியமான பவுலர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர். இதனால் அந்த அணியின் பவுலிங் யூனிட் இந்த முறை வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications