மும்பை குடும்பத்தில் விரிசல்! நடுப்பையன் பாண்டியா வந்ததும்! பெரியவன் ரோஹித், சின்னவன் பும்ரா அப்செட்
சென்னை: மும்பை குடும்பம் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததால் வீரர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா கேப்டன்சி காலி: ஒரு பக்கம் இந்திய டி 20 கேப்டன்சியை இழக்கும் ரோஹித் சர்மா.. மும்பை அணியின் கேப்டன்சியையும் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதோ என்று தோன்றுகிறது. இதை ரோஹித் சர்மா அப்போதே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வர வேண்டாம்.. அவரை எடுக்க வேண்டாம் என்று ரோஹித் சர்மா கூறியதாக நேற்று செய்திகள் வந்தன.
பும்ரா கோபம்: இன்னொரு பக்கம் பும்ராவும் இந்த முடிவால் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவிற்கு பின் அனுபவம் வாய்ந்த வீரர் பும்ராதான். அவரைத்தான் கேப்டனாக போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் பும்ராவிற்கு சமமான வீரர்கள் கில், சஞ்சு சாமான், கே எல் ராகுல் எல்லாம் கேப்டனாக உள்ளார். ருத்துராஜ் கூட கேப்டன்சி பதவிக்கு போட்டியில் உள்ளார். ஜடேஜாவும் கேப்டன் ஆகும் வாய்ப்பில் உள்ளார். அப்படி இருக்க பும்ராவை கேப்டனாக நியமிப்பார்.. மும்பை அணியின் கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பும்ரா இல்லை என்றால் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்துள்ளார்.
ஹர்திக் கேப்டன்: ஹர்திக் பாண்டியா ஒரு அணியில் கேப்டனாக இருந்துவிட்டு இன்னொரு அணிக்கு கேப்டன்சி இல்லாமல் வர மாட்டார். கண்டிப்பாக ஹர்திக் பாண்டியா மும்பை கேப்டன் ஆகவே வாய்ப்புகள் உள்ளன . இதனால் மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கும்.
இதனால்தான் பும்ரா அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. பும்ரா இதை முன்னிட்டே.. அமைதிதான் சிறந்த பதில் என்று ஆங்கிலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் போட்டி: 2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications