அந்த குரல் கேட்கலையே.. அசிங்கப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் அணி! தோனி சொன்ன அந்த வார்த்தை.. டிரெண்டாகுதே
சென்னை: இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களுக்கு இடையில் தோனியின் இரண்டு முக்கியமான வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை இந்தியா பாகிஸ்தான் மேட்சில் முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக, கிண்டல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. பின்வரும் சம்பவங்கள் நேற்று மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்று பாபர் ஆஸம் பேச தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் விதமாக, அவர்களை வெறுப்பேற்றும் விதமாக அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
( விட்றாத மாறா.. அவமானப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்? இதை மட்டும் சென்னை செஞ்சா.. உலகமே திரும்பும்)
தோனி வீடியோ டிரெண்ட்: இந்த நிலையில்தான் தோனியின் இரண்டு வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. அதில் ஒன்றில்.. உலகக் கோப்பை 2011யை வென்ற போது.. நீங்கள் சிறப்பாக உணர்ந்த விஷயம் எது என்று கேள்வி எழுப்பி இருப்பார்கள். அதற்கு பதில் அளித்த தோனி கோப்பையை வென்றதை விட அதுக்கு 10, 15 நிமிடம் முன்பு 40,50 ஆயிரம் மக்கள் வந்தே மாதரம் என்று எழுப்பிய கோஷத்தை கிரவுண்டில் கேட்டது இன்னும் சிறப்பாக உணர வைத்தது.
அதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை.. உணர்ச்சி பெருக்கை கொடுத்தது என்று தோனி குறிப்பிட்டு இருப்பார். அதை இப்போது நெட்டிசன்கள் குறிப்பிட்டு.. பாருங்க அப்போது எல்லாம் வந்தே மாதரம் என்ற வார்த்தைதான் இருந்தது. இப்போது அதை தூக்கி வீசிவிட்டு மதரீதியாக ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.,

இன்னொரு பேட்டியில்.. தோனி , சென்னை எனக்கு கிரிக்கெட்டை பற்றி கற்றுக்கொடுத்தது. அதை எப்படி அணுக வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது. சென்னை மக்கள் எதிரணியை கூட கொண்டாடுவார்கள். எதிரணி சிறப்பாக ஆடினாலும் கைதட்டுவார்கள் . அந்த குணம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது என்று தோனி கூறினார். அதை நெட்டிசன்கள் குறிப்பிட்டு சென்னை ரசிகர்கள் பற்றி பாராட்டி வருகின்றனர். பாகிஸ்தானின் அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னையில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களை சிறப்பாக உபசரிக்க வேண்டும், அவர்களை ரசிகர்கள் சரியாக நடத்த வேண்டும். சென்னை மக்கள் எவ்வளவு விருந்தோம்பல் கொண்டவர்கள், தன்மையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மக்கள்.. சென்னை ரசிகர்கள் பொதுவாகவே நல்ல கிரிக்கெட் அறிவு கொண்டவர்கள். மதம், அரசியல் பார்க்காமல் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்க கூடியவர்கள்., 1997ல் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக 197 அடித்தார். அப்போது சென்னை ரசிகர்கள் அவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள்.அந்த அளவிற்கு தமிழ்நாடு ரசிகர்கள் தன்மையானவர்கள். இந்த நிலையில்.. அடுத்து பாகிஸ்தான் ஆட உள்ள இரண்டு போட்டியிலும் ரசிகர்கள் அவர்களை சென்னையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications