கேகேஆர் அணிக்கு கட்டம் சரியில்லை.. தரமான இந்திய பவுலர் விலகல்.. கேமரூன் க்ரீனால் சமாளிக்க முடியுமா?
மும்பை: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹர்சித் ராணா காயம் காரணமாக விலகியுள்ளதோடு, பதிரானா என்ஓசி பிரச்சனையால் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது ஆகாஷ் தீப்பும் விலகி இருப்பது பின்னடைவாக அமைந்திருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நேதன் எல்லீஸ், கேகேஆர் அணியின் ஹர்சித் ராணா, ஐதராபாத் அணியின் பேட் கம்மின்ஸ், ஆர்சிபி அணியின் ஹேசல்வுட், டெல்லி அணியின் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் முழுமையாகவும், பாதி போட்டிகளிலும் விலகி இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவுக்கு இன்னும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் என்ஓசி கொடுக்கவில்லை. அதேபோல் ராஜஸ்தான் அணிக்காக டிரேட் செய்யப்பட்ட சாம் கரணும் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் பல்வேறு அணிகளும் மாற்று வீரர்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு அடுத்த இடியாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மினி ஏலத்தில் ஆகாஷ் தீப்பை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.
பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக ஆடி வந்தார் ஆகாஷ் தீப். ஆனால் இப்போது காயம் காரணமாக பெங்களூரில் உள்ள என்சிஏவில் ஆகாஷ் தீப் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கேகேஆர் அணியின் பயிற்சி முகாமில் ஆகாஷ் தீப் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்சித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் விலகியுள்ள சூழலில், வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய 3 இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அந்த அணியில் இருக்கின்றனர். மற்றபடி பதிரானா வருவதற்கு தாமதம் ஏற்பட்டால், கேமரூன் க்ரீனை வைத்துதான் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications