மும்பை அணி பேருந்துக்குள்.. நேரடியாக சென்ற ஹர்திக் பாண்டியா காதலி.. ஜஸ்மின் வாலியாவால் அதிர்ச்சி!
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜஸ்மின் வாலியாவின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேகேஆர் அணியுடனான போட்டி முடிவடைந்த பின் அவர் நேரடியாக மும்பை அணி வீரர்களின் பேருந்துக்குள் ஏறி அமர்ந்தார். இதனால் ஹர்திக் பாண்டியா - ஜஸ்மின் வாலியா காதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதேபோல் நடாஷா ஸ்டான்கோவிக் உடனான பிரிவுக்கு பின் ஹர்திக் பாண்டியா உடனடியாக அடுத்த காதலில் விழுந்தார்.

ஜஸ்மின் வாலியாவுடன் காதல்
பிரிட்டிஷ் நடிகையும், பாடகியுமான ஜஸ்மின் வாலியா உடன் உறவில் இருந்த அவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே ஜஸ்மின் வாலியா உடன் வாழ்ந்து வருகிறார். அதன்பின் க்ரீஸ் நாட்டிற்கு விடுமுறை சென்ற ஹர்திக் பாண்டியா, இருவரும் தனித் தனியாக பதிவிட்ட புகைப்படங்களால் ரசிகர்கள் கணித்தனர். தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுடன் கொழும்பு சென்றார்.
ஐபிஎல் போட்டிகள்
அதேபோல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது துபாயில் இருந்தார். ஆனாலும் இருவருமே தங்களின் உறவு குறித்து அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா - ஜஸ்மின் வாலியா இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மும்பை அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஜஸ்மின் வாலியா நேரில் வருவது வழக்கமாகி இருக்கிறது.
வான்கடே சம்பவம்
அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தின் போது கேமரா கண்கள் ஜஸ்மின் வாலியா பக்கம் திரும்புவது வழக்கமாகி இருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் மும்பை அணி வீரர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் வந்தனர்.
பேருந்தில் ஜஸ்மின் வாலியா
அதேபோல் மைதானத்தில் இருந்து புறப்படும் போது குடும்பத்தினருடன் மும்பை அணி பேருந்தில் செல்வார்கள். ஐபிஎல் தொடரில் குடும்பத்தினருடன் இருக்க எந்த கட்டுப்பாடுகள் இல்லை. அந்த வகையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் ஜஸ்மின் வாலியா நேரடியாக மும்பை அணியின் பேருந்துக்குள் ஏறி அமர்ந்தார்.
விரைவில் அறிவிப்பு?
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலமாக ஹர்திக் பாண்டியா - ஜஸ்மின் வாலியா இருவரின் காதல் உறவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு காதலை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications