ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மீது மும்பை எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறது - பொல்லார்ட்
மும்பை: நடப்பு ஐபிஎல் விளையாட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொதப்பலுக்கு மிக முக்கிய காரணமாக ரோகித் ஷர்மா இருந்தார். ஆனால், இப்போது அவரது ஆட்டமே வேற. இதனை குறிப்பிட்டு ரோகித் ஷர்மாவையும், ஹர்திக் பாண்டியாவையும் பொல்லார்ட் பாராட்டியுள்ளார்.
நடப்பு ஐப்பிஎல் விளையாட்டின் தொடக்கத்தில் மும்பை அணியின் ஆட்டம் சொதப்பலாகவே இருந்தது. இத்தனைக்கும் இந்த அணியில் ரோகித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தபோதும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை. ரசிகர்களால் பெரிதும் நம்பப்பட்ட ரோகித் ஷர்மா அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஆட்டத்தில் பலருக்கும் திருப்தியில்லை. எனவே அவர் ட்ரோல் மெட்டிரியலாக மாற்றப்பட்டார்.

இதற்கு சரியான பதிலடியை அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் அடித்த இரட்டை அரை சதம் மும்பை அணியை டாப்-4 இடத்திற்கு உயர்த்தியிருக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லர்ட் தற்போது மனம் திறந்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"ரோகித் நன்றாக விளையாடுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் இருந்தது. சில நேரங்களில் விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கை குறைந்துபோகலாம். ஆனால் கிரிக்கெட்டை முழு மூச்சாக கொண்டிருக்கும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வீரர் இப்படியான ட்ரோல்களை சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. சூழல் தற்போது மாறியிருக்கிறது. எனவே அவருக்கு பலரும் ஆதரவளிக்க வேண்டும்.
ரோகித், ஹர்திக் என இருவர் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது மும்பை அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் தொடர்ந்து நாங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல ஹர்திக் பாண்டியா பற்றி கூறிய பொல்லார்ட் கூறுகையில், "உலக கோப்பை சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல வெற்றிகளை அவர் கிரிக்கெட்டில் கண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் பல சவால்களை அவர் கடந்து வந்திருக்கிறார். இவ்வளவு இன்னல்களையும், துன்பங்களையும் சந்தித்த பின்னரும் தொடர்ந்து முன்னேறி வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாம் எல்லோருமே மனிதர்கள்தான். சிலருக்கு வாழ்க்கையில் கொஞ்சம் பிரேக் தேவைப்படும்" என்று கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications