இதுதான்டா ஷேன் வார்னே.. உயிரிழந்த பின்பும் ரூ.460 கோடி வருமானம்.. RR அணி விற்பனையால் நடந்த சம்பவம்!
மும்பை: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே எடுத்த முடிவு, தற்போது அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டி கொடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில், அதில் ரூ.460 கோடி ஷேன் வார்னேவின் பங்காக அவரின் குடும்பத்தினருக்கு செல்லவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் பல்வேறு அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று ராஜஸ்தான் அணி விற்பனை செய்யப்பட்ட தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான கல் சோமானி ராஜஸ்தான் அணியின் 100% பங்குகளை வாங்கி இருக்கிறார்.

இதனால் ராஜஸ்தான் அணி ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச லீக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. ஏனென்றால் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது ராஜஸ்தான் அணி ரூ.320 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 18 ஆண்டுகளில் இதன் மதிப்பு ரூ.15,300 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஆச்சரியம் ஒரு பக்கம் இருக்க, ஷேன் வார்னே கொடுத்துள்ள ஆச்சரியம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ரூ.2 கோடிக்கு ஷேன் வார்னே வாங்கப்பட்டார். அப்போது போட்டி ஊதியம் உள்ளிட்டவையோடு ஷேன் வார்னேவின் ஊதியமாக ஆண்டுக்கு ரூ.2.34 கோடி பெற்றார்.
ஆனால் ராஜஸ்தான் அணியை நீங்களே நடத்துங்கள் என்று ஷேன் வார்னே அந்த அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அப்போது ஷேன் வார்னே பயிற்சியாளராகவும், இயக்குநராகவும் செயல்பட்டார். இப்படி செயல்பட ராஜஸ்தான் அணியிடம் எந்த சம்பளத்தையும் ஷேன் வார்னே வாங்கவில்லை. அதற்கு பதிலாக ஷேன் வார்னே ஆண்டுக்கு 0.75% பங்குகளை எனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதனை ஏற்ற ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் 0.75% பங்குகளை அவருக்கு எடுத்து வைத்தனர். இதனால் 4 சீசன்கள் ஆடிய ஷேன் வார்னே 3% ராஜஸ்தான் ராயல்ஸ் பங்குகளை வைத்திருந்தார். தற்போது ராஜஸ்தான் அணி ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில், ஷேன் வார்னேவின் பங்காக ரூ.460 கோடி அவரின் குடும்பத்தினருக்கு செல்லவுள்ளது.
ஷேன் வார்னே 2022ஆம் ஆண்டிலேயே உயிரிழந்தார். இருப்பினும் 18 ஆண்டுகளுக்கு முன் ஷேன் வார்னே எடுத்த முடிவு அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய வருமானமாக மாறி இருக்கிறது. இதனால் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஷேன் வார்னா நிதி விவகாரத்திலும் மாஸ்டர் மைண்ட் என்பதை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications