ஆர்சிபி வெற்றி உறுதியான அந்த நொடி.. ஆனந்த கண்ணீருடன் விராட் கோலி.. க்ருனால் பாண்டியா சம்பவம்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்ற நிலையில், விராட் கோலி ஆனந்த கண்ணீருடன் மைதானத்தில் கொண்டாடியது ரசிகர்களிடையே எமோஷனாக்கி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி பட்டத்தை கைப்பற்றியுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிலும் ஆர்சிபி அணி வெற்றி உறுதியான போது, விராட் கோலி எமோஷனலாக காணப்பட்டார்.

அப்போதே கண்களில் ஆனந்தக் கண்ணீர் நின்ற நிலையில், ரசிகர்கள் எமோஷனலாகினார்கள். இறுதியாக கடைசி பந்து வீசப்பட்ட பின், அனைத்து வீரர்களும் நேராக விராட் கோலியை நோக்கி சென்று கொண்டாடினார்கள். அப்போது விராட் கோலி மட்டுமல்லாமல் ரஜத் பட்டிதாரும் ஆனந்தக் கண்ணீருடன் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications