இதுதான்டா சஞ்சு சாம்சன்.. 3 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ருதுராஜ்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை பெங்களூர் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி மார்ச் 30ஆம் தேதி நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆட உள்ளது. இம்முறை சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைந்திருப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைந்தாலும், கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து செயல்படுகிறார். அதேபோல் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இணை களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருந்தாலும் ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இடையில் ஈகோ பிரச்சனை எதுவும் உருவாகிவிடுமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் யூடியூப் பக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அளித்துள்ள நேர்காணல் வெளியாகி இருக்கிறது. அதில் சஞ்சு சாம்சன் டிரேட் ஒப்பந்தம் தொடர்பாக ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருக்கிறார்.
அதில் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், 3 ஆண்டுகளுக்கு முன் சஞ்சு சாம்சனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது சஞ்சு சாம்சன் என்னிடம், தோனி எப்படி இருக்கிறார்? சிஎஸ்கே அணியின் சூழல் எப்படி இருக்கிறது? நீதான் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதும் அவரிடம் கேப்டன்சி பற்றி எல்லாம் எனக்கு கவலையே இல்லை.
ஆனால் சிஎஸ்கே அணியின் சூழலில் விளையாட விரும்புகிறேன். ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சன் என்னிடம், நான் சிஎஸ்கே அணிக்கு வந்து கேப்டனாக இருக்க கூடாது என்று நினைக்கிறேன். நான் உனக்கு கீழ் விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் சிஎஸ்கே என்பது உன்னுடைய அணி. நான் அங்கு ஒரு வீரராக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.
அதேபோல் சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக அந்த அணிக்கு வரவே விரும்புவேன். அதேபோல் இந்த சீசனில் எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாடுவேன் என்று முடிவு செய்யவில்லை. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் போதுமான அனுபவம் இல்லை என்ற உணர்வு இருந்தது. மற்றபடி சிஎஸ்கே அணிக்கு எது தேவையோ, அதனை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications