7 கிலோ எடை அதிகரிக்க.. நான் பட்ட பாடு இருக்கே.. காயத்திற்கு பின் நடந்தது என்ன? மக்கள் கேப்டன் பதில்!
மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு உயிருக்கு ஆபத்தான வகையில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்தது எப்படி என்பது குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்புக்கு வந்த முதல் சீசனிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் பஞ்சாப் அணி வெற்றியை பறி கொடுத்தது. இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயரை ரசிகர்கள் பலரும் அதிகமாக ரசிக்க தொடங்கினார்கள்.

ஆனால் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் செய்த போது உயிருக்கு ஆபத்தான வகையில் காயம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரம் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவிலேயே ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், உயிர் தப்பினார். இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் சவால் நிறைந்த கிரிக்கெட் களத்திற்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை.
இதுதொடர்பாக ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், எந்தக் காயம் ஏற்பட்டாலும், கம்பேக் கொடுப்பது மிகவும் சவாலான விஷயம். அந்த காயத்தின் போது நான் 7 கிலோ எடை குறைந்துவிட்டேன். அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. பின்னர் 2 மாதங்களுக்கு பின் சரியான ஃபிட்னஸ்-க்கு வந்தேன். அந்த 7 கிலோ எடையை மீண்டும் அதிகரிப்பதற்குள் ஒரு பாடு பட்டுவிட்டேன்.
வாழ்க்கையில் சவாலான கால கட்டங்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியான சவாலான நேரமாக அது அமைந்தது. அந்த சவாலை ஏற்று கடந்து வந்ததை பெருமையாக நினைக்கிறேன். அதேபோல் காயத்திற்கு பின் மீண்டும் இந்திய அணிக்காக ஆடியது மகிழ்ச்சி. பஞ்சாப் அணி மீது இம்முறை அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஐபிஎல் தொடரும் சவால் நிறைந்தது. ஒவ்வொரு முறை நாங்கள் களத்திற்குள் இறங்கும் போதும், வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இம்முறை எங்களின் இலக்கு கோப்பை தான். இந்த 2 மாதங்கள் வீரர்கள் அனைவருமே ஒரு குடும்பத்தை போல் இணைந்திருக்கும் காலம் என்றும் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications