அமைதி என்பது.. கல்யாணத்தை நிறுத்திய பின் ஸ்மிருதி மந்தனா கொடுத்த மெசேஜ்.. பலஷ் முச்சலுக்கு பதிலடி
மும்பை: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலஷ் முச்சல் உடனான கல்யாணத்தை ரத்து செய்த நிலையில், அமைதி குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள பதிவு டிரெண்டாகி வருகிறது. இதன் மூலமாக திருமணம் விவகாரத்தில் இருந்து ஸ்மிருதி மந்தனா வெளி வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலஷ் முச்சல் உடனான கல்யாணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தார். உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அடைந்த வெற்றிக்கு பின், ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களின் காதலையும் இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டனர்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் பலஷ் முச்சலும், ஸ்மிருதி மந்தனா இந்தூரின் மருமகளாக வரப் போகிறார் என்று கூறினார். தொடர்ந்து இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற டிஒய் பாட்டில் மைதானத்தில் வைத்து பலஷ் முச்சல் நிச்சயதார்த்த மோதிரத்தை ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் அணிவித்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது.
இதன்பின் நவம்பர் 23ஆம் தேதி ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் இடையிலான திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. திருமணத்திற்கு முன்பான கொண்டாட்டங்களும் களைக்கட்டியது. திருமணத்திற்கு முதல்நாள் நிகழ்வான சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனாவும் சக இந்திய வீராங்கனைகளும் ஆடிய டான்ஸ் வரவேற்பை பெற்றது.
ஆனால் திடீரென ஸ்மிருதி மந்தனா திருமணத்தை நிறுத்தினார். முதற்கட்டமாக ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின் பலஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பலஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த சில சேட்களும் வெளியாகின.
இதனால் பலஷ் முச்சலின் உறவு குறித்து தெரிய வந்ததால், ஸ்மிருதி மந்தனா திருமணத்தை நிறுத்தியதாக சில தகவல் வெளியாகியது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் ஸ்மிருதி மந்தனா தன் சொந்த விவகாரங்களை பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதேபோல் பலஷ் முச்சலும், வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். தற்போது ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்த சோகத்தில் இல்லாமல், அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இப்படியான சூழலில், ஸ்மிருதி மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு பேசுபொருளாகி இருக்கிறது.
அதில் ஸ்மிருதி மந்தனா, என்னை பொறுத்தவரை அமைதி என்பது மௌனம் அல்ல.. அது கட்டுப்பாடு என்று பதிவிட்டுள்ளார். ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய மொபைல் விளம்பரத்தை இந்த வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். அது ஸ்மிருதி மந்தனாவின் வாழ்க்கை சூழலுக்கும் பொருந்தி போயிருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஸ்மிருதி மந்தனா கம்பேக் என்று கமெண்டில் பாராட்டி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications