இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தில்லுமுள்ளு செய்து வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமீர் விமர்சித்துள்ளார். ஹெட்மயர் விக்கெட் சர்ச்சையானது என்று கூறியுள்ள முகமது ஆமீர், அவர் இருந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக 230 ரன்களை கடந்து சென்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி சஞ்சு சாம்சனின் சிறந்த ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் வெற்றியை பெற்றது.

இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி இருக்கிறது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமீர் பேசுகையில், இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்று கணிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் முகமது ஆமீரின் கணிப்பு தவறு என்று இந்திய அணி நிரூபித்திருக்கிறது.
இதுதொடர்பாக முகமது ஆமீர் பேசுகையில், என்னை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மயர் விக்கெட் கொஞ்சம் சர்ச்சைக்குரியது. அந்த நேரத்தில் ஹெட்மயர் விக்கெட் இல்லை என்று கருதினேன். ஒருவேளை ஹெட்மயர் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் களத்தில் செலவிட்டிருந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணியால் எளிதாக 220 முதல் 230 ரன்களை குவித்திருக்க முடியும்.
ஆனால் எனது கணிப்பு தவறிவிட்டதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இருந்தாலும் சஞ்சு சாம்சனின் அவரின் வாழ்நாளுக்கான இன்னிங்ஸை விளையாடி இருக்கிறார். அவரின் ஐபிஎல் மற்றும் இதர போட்டிகளில் ஆடிய இன்னிங்ஸை பார்த்துள்ளேன். எதுவும் இந்த அளவிக்கு நெருக்கமாக வராது. அதுவும் வாழ்வா சாவா போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடி இருப்பது நிச்சயமாக ஸ்பெஷல் தான்.
அதேபோல் கிரிக்கெட் அனலிஸ்ட் பார்வையில் பார்த்தால், இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. ஃபீல்டிங்கில் அவ்வளவு சொதப்புகிறார்கள். பும்ராவை தவிர்த்து மற்ற அத்தனை பவுலர்களும் ரன்களை விட்டுக் கொடுக்கிறார்கள். இந்திய அணி ஒரேயொரு வீரரின் வலிமையை வைத்துக் கொண்டு விளையாடி வருகிறது என்று கூறியுள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications