Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது எங்க கோட்டை.. பிரம்மாண்ட சதம் அடித்த விராட் கோலி, ரோகித் சர்மா.. கம்பீருக்கு புதிய தலைவலி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: விஜய் ஹசாரே டிராபியில் இந்திய ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் சதம் விளாசி இருப்பது அஜித் அகர்கருக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. இதன் மூலமாக 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட இருவருமே முனைப்புடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்துவிட்டனர். இதனால் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் 2027 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் முனைப்பை அவர்கள் வெளிக்காட்டவில்லை என்று சொல்லப்பட்டது.

Virat Kohli

அதேபோல் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் இருவருமே சீனியர் வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். குறிப்பாக ஒருநாள் அணியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று கம்பீர் தீவிரமாக இருக்கிறார். அதற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை ஒருநாள் அணியில் இருந்து நீக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இருவருமே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் விராட் கோலி 2 சதங்கள், ஒரு அரைசதம் விளாசியது பிரமிப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஐசிசி தரவரிசையில் இருவரும் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஆகிய இடங்களில் இருக்கின்றனர். ஆனால் அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கு இடையிலான இடைவெளியை காரணம் காட்டி இரு வீரர்களையும் நெருக்கி வருகின்றனர். இதனால் ஃபிட்னஸ் மற்றும் ஃபார்ம் பாதிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது.

ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட முடிவு எடுத்தனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 131 ரன்களும், ரோகித் சர்மா 155 ரன்களும் குவித்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட்டிலும் இருவரும் அசத்துவதால், அஜித் அகர்கருக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளது. இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 2027 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகுவதற்கும் போதுமான நேரம் கிடைக்கும். இதனால் அஜித் அகர்கர் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+