டிரெஸ்ஸிங் ரூமில் விடாமல் நடக்கும் சம்பவம்.. சின்ன டிரிக்தான்.. ஆனா இந்திய அணியில் பெரிய பாதிப்பு!
சென்னை: இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் சம்பவம் ஒன்றின் காரணமாக அணிக்குள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கெட்ட விதத்தில் இல்லாமல் நல்ல விதத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது .
பொதுவாக கிரிக்கெட் இல்லாமல் எந்த விளையாட்டாக இருந்தாலும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் அவசியம். சின் கைத்தட்டு.. சின்ன பாராட்டு.. அணி வீரர்களுக்கு முன் புகழுரை.. முயற்சிக்கு சிறந்த பாராட்டு ஆகியவை வழங்கப்பட வேண்டும். இது அந்த வீரர்களுக்கும் மேலும் ஊக்கம் அளிக்கும். மேலும் சிறப்பாக விளையாடுவதற்கு ஊக்கமாக அந்த விஷயம் இருக்கும்.

இந்திய அணி: அந்த வகையில்தான் இந்திய அணியிலும் டிரெஸ்ஸிங் ரூமில் புதிய சம்பிரதாயம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அணியில் நன்றாக ஆடும் வீரர்களில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு மெடல் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மேட்ச்சிற்கு பின்பும் இந்த மெடல் மாற்றி மாற்றி வழங்கப்படுகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த மெடல் செல்லும். அதன்படி ஆஸ்திரேலியா ஆட்டத்தில் விராட் கோலிக்கு இந்த மெடல் வழங்கப்பட்டது. அடுத்ததாக ஷரத்துல் தாக்கூர் இந்த விருதை பெற்றார். மீண்டும் கோலிக்கு விருது வழங்கப்பட்டது. அவரிடம் இருந்து நேற்றைய போட்டியில் நன்றாக ஆடிய ஜடேஜாவிற்கு இந்த மெடல் சென்றுள்ளார்.
( கோலி சதத்தை நெருங்கிய போது! வைட் கொடுக்கப்படாதது ஏன்? கெட்டில்பெர்க் முடிவிற்கு பின் உள்ள ஐசிசி விதி )
அவர் பிடித்த கேட்ச் மற்றும் பீல்டிங்கை பாராட்ட வேண்டும் என்பதற்காக இந்த அவார்ட் வழங்கப்பட்டது. இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் இந்த வழக்கம் காரணமாக அணிக்குள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கெட்ட விதத்தில் இல்லாமல் நல்ல விதத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது . அதன்படி அணி வீரர்கள் சிறப்பாக கேட்ச் பிடிக்க வேண்டும். இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். முக்கியமாக பீல்டிங் செய்வதில் இந்திய வீரர்கள் அதிக ஊக்கத்துடன் உள்ளனர். இதனால் இந்திய அணியிடம் சமீபமாக இருந்த மிஸ் பீல்டிங் வெகுவாக குறைந்து உள்ளது.
அதிரடி வெற்றி: வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் நிதானமாக ஆடி கொஞ்சம் கொஞ்சமாக பார்ட்னர்ஷிப் அமைத்தது.. விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக நிதானமாக வங்கதேசம் அணி ஆடிக்கொண்டு இருந்தது

தொடக்கவீரர் டான்சிம் ஹாசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் விக்கெட்டும் போன பின் வங்கதேசத்தின் மிடில் ஆர்டர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் முஸ்பிக்கர் ரஹீம் 38, முகமதுல்லா 46 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் வங்கதேசம் அணி 256 ரன்கள் எடுத்தது,
பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப், ஷரத்துல் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் தொடக்கத்தில் இருந்தே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினார்கள். ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையை பொழிந்தார். 40 பந்தில் ரோஹித் சர்மா 2 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 48 ரன்கள் எடுத்தார். அதேபோல் 55 பந்தில் கில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று 53 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த கோலி.. கடைசி பந்து வரை சென்று சிக்ஸ் அடித்து சதம் அடித்தார்., இதனால் இந்தியா எளிதாக நேற்று வென்றது.












Click it and Unblock the Notifications