கடைசி மேட்ச்ல சதமடித்தும் டீமில் இடமில்லை.. ஜெய்ஸ்வாலுக்கு நடந்த துரோகம்.. பின்னணியில் சுப்மன் கில்!
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் மாதம் தொடங்கவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் அதிரடி தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ஸ்வால் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் மேட்ச்-வின்னிங் சதம் அடித்திருந்தார். அடுத்த தொடரிலேயே அணியில் இருந்து நீக்கியது ஏன் என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவை நோக்கி ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சுப்மன் கில் காயம் அடைந்தார்.

இதனால் மாற்று தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரின் கடைசி போட்டியில், அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 116* ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமானார். தற்போது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதன்மைத் தொடக்க வீரர்கள் அணிக்குத் திரும்பியதால், ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் பேக்-அப் ஆப்ஷன் தேவை என்ற காரணத்தைக் கூறி, ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக இஷான் கிஷன் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 3-வது ஓப்பனராகப் பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், தற்போது அணியிலேயே இல்லாதது அவரது ஒயிட் பால் கிரிக்கெட் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ரோஹித், கில் இருப்பதால் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், திலக் வர்மா தலைமையில் இலங்கை செல்லவிருக்கும் 'இந்தியா ஏ' அணியிலாவது அவரைச் சேர்த்திருக்க வேண்டும். வீட்டில் சும்மா உட்கார வைப்பதற்குப் பதிலாக, அங்கு விளையாட அனுப்பியிருந்தால் அவர் உற்சாகமாக இருந்திருப்பார்.
அவர் 'இந்தியா ஏ' அணியில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக இந்திய அணி நிர்வாகம் ஒரே ஒரு திறமையை மட்டும் கொண்ட வீரர்களை விட, பேட்டிங் மற்றும் கீப்பிங் அல்லது ஆல்-ரவுண்டர் எனப் பல திறமைகளைக் கொண்ட வீரர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜெய்ஸ்வால் ஒரு தேர்ந்த பியூர் பேட்ஸ்மேன் என்பதால், இஷான் கிஷனுக்காக அவர் பலியாக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கௌதம் கம்பீரின் 'கூடுதல் ஸ்பின்னர்' வியூகத்தால் ஜெய்ஸ்வால் கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டார். இப்போது ஆப்கானிஸ்தான் தொடரிலும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications