For Daily Alerts
Just In
இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்
- இலங்கையில் 1983-2009 இனப்போர் நடந்து முடிந்தது.
- இந்த போர்க்காலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
- யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார்.
- இவர்களில் எவரும் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ கண்டறியப்படவில்லை.
- இவர்களில் பெரும்பாலோனோர் அரச படைகளால் பிடிக்கப்பட்டதாகவோ அல்லது படைகளிடம் சரணடைந்து பின்னர் காணாமல் போனதாகவோ ,அவர்களது உறவினர்களும், மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.
இலங்கை : வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம்
- தற்போது அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற அமைப்புக்கு முன் இதே பிரச்சனை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பரணகம ஆணையம் அதன் பணி முடிவடையாத நிலையில் 2016ல் நிறுத்தப்பட்டது.
- ஐ.நா மனித உரிமைக்கவுன்சில் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
- 1989ல் அரசு ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்க எடுத்த முயற்சிகள் போதும் இது போல ஆயிக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயினர்.
- பிரபலமான சிங்கள கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட காணாமல் போன பல சிவிலியன்களில் ஒருவர்.
- விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இராணுவத்தில் சரணடைந்த பலரும் காணாமல் போயிருக்கின்றனர்.
Comments
English summary
We have compiled ten important details about the persons missing during the war in Sri Lanka.