இலங்கை விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- 4 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை விமானப் படைக்குச்சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையின் கட்டுநாயக்க விமானப் படை தளத்தில் இருந்து ரத்மலானை என்ற இடம் நோக்கி இன்று காலை 6.30 மணிக்கு விமானம் பறந்து கொண்டிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாக அந்த விமானம் அத்துருகிரிய ரப்பர் எஸ்டேட்டில் வீடு ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் தீக்காயங்களுடன் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யா தயாரிப்பான அன்டனோவ் -32 என்ற வகையை சேர்ந்தது.
இது குறித்து விசாரணை நடைபெற்ற்று வருவதாக இலங்கை விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications