தமிழகப் புரட்சிக்கு ஈழத் தமிழர்கள் ஆதரவு போராட்டம்- கிளிநொச்சி, மட்டக்களப்பில் போராட்டம்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கிளிநொச்சி, மட்டக்களப்பில் வியாழன்று போராட்டம் நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சிக்கு ஈழத் தமிழர்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர். இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் வியாழக்கிழமையன்று ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றன.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் போராட்டங்களுக்கு ஈழத் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் நல்லூரில் புதன்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் வியாழன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டங்களின் போது தமிழகத்துக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications