உக்ரைனுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விநியோகம்: சிக்கினார் ராஜபக்சே உறவினர்!!
கொழும்பு: உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்கா வீரதுங்கா மீது விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர் உதயங்கா வீரதுங்கா. இவர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார்.

ஆனால் ராஜபக்சே இலங்கையின் அதிபரான போது உணவு விடுதி நடத்திய உதயதுங்காவை ரஷ்யாவுக்கான இலங்கை தூதராக்கினார். மொத்தம் 9 ஆண்டுகாலம் இலங்கை தூதராக அவர் பணியாற்றினார்.
அண்மையில் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உதயதுங்கா தலைமறைவானார். அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் உக்ரேன் அரசு உதயங்கா வீரதுங்கா மீது முறைப்படி புகார் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதராக இருந்த போது உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப்படைக்கான மிக்-27 ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறுகையில், இந்த விவகாரத்தில் நாங்கள் முழுமையான விசாரணை நடத்துவோம் என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications