For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்தியில் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் இல்லாதது மிக்க மகிழ்ச்சி: இலங்கை அமைச்சர் ராம்புக்வெல்லா

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: அமைந்திருக்கும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு இல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை ஊடகத்துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான கெஹலியா ரம்புக்வெல்லா கூறுகையில்,

Happy about Jaya not having upperhand in centre: Sri Lanka

இந்தியாவில் சக்திவாய்ந்த மத்திய அரசு அமைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லியில் வலுவான அரசு அமைவது எங்களுக்கு மிகவும் நல்லது. தமிழக அரசின் நெருக்கடி எதுவும் இல்லாமல் செயல்படும் மத்திய அரசுடன் பணிபுரிவதில் இலங்கை அரசு மகிழ்ச்சி அடைகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா 37 தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் அவருக்கு மத்திய அரசில் செல்வாக்கு இல்லாமல் உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளின் நெருக்கடி இல்லாமல் மோடி அரசு செயல்படும். அதனால் நாங்கள் வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசிடம் தமிழக அரசின் நெருக்கடி இல்லாமல் முடிவு எடுக்க முடியும். மோடி வெற்றி பெற்ற உடனேயே அவரை வாழ்த்திய வெளிநாட்டு தலைவர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒருவர் என்றார்.

English summary
Sri Lankan minister Kehliya Rambukwella told that the island nation government is happy that TN CM Jayalalithaa does'nt have an upperhand in the new central government to be headed by Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X