ராஜபக்சே ஆட்சியில் மனித உரிமை மீறல்... வலுவான ஆதாரம் இருப்பதாக இலங்கை அரசு தகவல்
கொழும்பு: ராஜபக்சே மற்றும் அவரது ஆட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே தோல்வி அடைந்தார். சிறீசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியின் படி, ராஜபக்சேவின் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணைகள் தொடங்கின.

இதற்கென காவல் துறை, ராணுவம், உளவுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழுவும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் சகோதரும், முன்னாள் நிதியமைச்சருமான பாசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். சில நிதி முறைகேடுகள் தொடர்பாக ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தியிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ராஜபக்சேவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள இந்த ஆதாரங்களே போதுமானவையாக உள்ளன. இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications