இந்திய கடற்படை தளபதி இலங்கையில் சுற்றுப்பயணம்! தமிழக மீனவர்களுக்கு தீர்வு கிடைக்குமா?
இலங்கையுடன் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் அந்நாட்டிற்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி சுனில் லம்பா, கொழும்புவில் நடைபெறும் சர்வதேச நாடுகளின் கடற்படை ஒத்துழைப்
கொழும்பு: இலங்கைக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி சுனில் லம்பா, அந்நாட்டுடன் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கொழும்புவில் நடைபெறும் சர்வதேச நாடுகளின் கடற்படை ஒத்துழைப்பு மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
இந்தியக் கடற்படைத் தளபதி சுனில் லம்பா 5 நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை இலங்கைக்குச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, அதிபர் மைத்ரி பாலசிறீசேனா பாதுகாப்புத்துறை தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

அந்நாட்டுத் தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை நடைபெறும் சர்வதேச கடற்படை ஒத்துழைப்பு மாநாட்டிலும் அட்மிரல் சுனில் லம்பா கலந்து கொள்கிறார். இதில் 39 நாடுகளின், 13 சர்வதேச அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் உரை நிகழ்த்தும் இந்திய கடற்படைத் தளபதி சுனில் லம்பா, சர்வதேச ஒத்துழைப்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்திய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக இலங்கை அரசினால் கட்டப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவு இடத்தில் சுனில் லம்பா மலர் வைத்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்தியப் பாதுகாப்புத் துறை செயலாளர் மோகன்குமார் அந்நாட்டு செயலாளர் கருணசேனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இரு நாட்டு கடற்படை ஒத்துழைப்பு மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இதில் பிராந்தியப் பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் இடையே கடற்படை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் விவாதிக்கப்பட உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications