யாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்! வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கில் முகாம்களை அமைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் வடக்கில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்திலும் முகாம்கள் அமைக்க சதித் திட்டம் தீட்டியிருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை உஸ்மானியா கல்லூரி வீதியில் சந்தேகத்துக்குரிய முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் கொழும்பில் வர்த்தகம் செய்து வருகிறவர்.

ISIS Camps in Jaffna?

சந்தேகத்துக்குரிய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுரங்க அறைகள் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் வேண்டுகோளை ஏற்றே இந்த அறைகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுரங்க அறைகளில் சிறை அமைப்பும் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் வீட்டின் உரிமையாளருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இருப்பினும் தமது விருப்பத்தின்படி சுரங்க அறைகளை மட்டுமே வீட்டின் உரிமையாளர் அமைத்து தந்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்குவதற்கான இடமாக யாழ்ப்பாணத்தை தேர்வு செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+