மீனவர் பிரச்னைக்காக ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த தயார்: இலங்கை அமைச்சர்

பி.பி.சி.தொலைக்காட்சிக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன அளித்த பேட்டியில், கூறியுள்ளதாவது:
"இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னை மோசமடைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மைய காலங்களில் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் தான் காரணம்.
தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய மீனவர்கள் உற்சாகமடைந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்றனர். இந்த ஆண்டில் மட்டும், இலங்கைக் கடற்படையின் கண்காணிப்பின்படி, 43 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அவர் தான் இந்தப் பிரச்னைக்கு கடந்த காலங்களில் அடித்தளமிட்டார். அவர் எடுத்திருந்த சில தீர்மானங்கள் காரணமாகத் தான் இந்தப் பிரச்னை மோசமடைந்திருக்கிறது.
இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க போக வேண்டாம், அது சட்டவிரோத நடவடிக்கை என்று நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு கூறியிருக்கிறோம். ஆனால் அப்படியான அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து வந்திருக்கவில்லை.
தமிழக முதல்வர் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுகிறார். ஆனால் மறுபக்கம் அவர்களின் மனித உரிமைகளை மீறுவோருக்காகவும் அவர் குரல் கொடுக்கிறார். அதனால்தான் அந்த மீனவர்கள் இலங்கை கடல்பரப்புக்குள் வருவதற்கு உற்சாகம் பெறுகின்றனர்.
தமிழக முதல்வர் அழைப்பு விடுத்தால், மீனவர் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications