இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்பில் இருந்த ஒரே தமிழர் மதிவாணனும் வெளியேற்றம்!
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்த ஒரே ஒரு தமிழரான மதிவாணனும் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம், அணியில் தமிழர் பிரதிநித்துவம் என்பது ஒன்றிரண்டுதான்.. இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் நீண்டகாலம் விளையாடினார்.

அதேபோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராக மதிவாணனும் நீண்டகாலம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் நிர்வாக உறுப்பினராக போட்டியிட மதிவாணன் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விண்ணப்பத்தை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சகம் நிராகரித்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் சேர்ந்திருந்த ஒரே ஒரு தமிழரான மதிவாணனும் தற்போது வெளியேற்றப்பட்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications