வணக்கம்.. பாரதியார் பாட்டு.. சிலப்பதிகாரம் – தமிழில் தத்தித்தத்திப் பேசிய மோடி!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு நல்லிணக்க அடிப்படையில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி அந்நாடாளுமன்றத்தில் பேசும்போது தமிழில் இருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டி உரையாற்றியுள்ளார்.

தனது பேச்சின்போது மகாகவி பாரதியாரின் பாடலான "சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம்" என்ற பாடலினை மேற்கோள் காட்டிப் பேசினார்.

Modi speaks about Kannagi in Sri Lanka…

அவர் பேசுகையில், ‘‘தலைமன்னாரில் இருந்து நாளை (இன்று) ஒரு ரயிலை நான் கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறேன்.

இதன் மூலம், இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான சுப்பிரமணிய பாரதி, "சிந்து நதியின் மிசை நிலவினிலே - சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என பாடியது நினைவுக்கு வருகிறது என்று தமிழில் கூறினார்.

மேலும், தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தின் கதாநாயகியான கண்ணகி, பத்தினி தெய்வமாக இலங்கையில் வணங்கப்பட்டு வருகின்றாள்.

ராமயணம் தோன்றியதே இலங்கையில்தான். நாகூர் ஆண்டவரிடமும், வேளாங்கண்ணியிலும் பக்தி கொண்டவர்கள் இலங்கையில் அதிகம்.

Modi speaks about Kannagi in Sri Lanka…

விவேகானந்தருக்கும், மகா போதி அமைப்பின் நிறுவனரான அனாகரிகா தர்மபாலவிற்கும் இடையிலான நட்பானது இந்தியா- இலங்கை உறவினைப் பிரதிபலிக்கின்றது.

தலைமன்னாரில் நான் தொடங்கவிருக்கின்ற ரயில் சேவை இதற்கு ஒரு அடித்தளம் ஆக விளங்க உள்ளது. பாரதி கண்ட கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகப் பிரச்சினைகளை மேம்போக்காக கூறிவிட்டு, இதுபோன்ற வர்ணச் சாயங்களைப் பூசி அதை மோடி மறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+