இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியது: ராஜபக்சே உறுதி

இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்து விட்ட நிலையிலும், இன்னும் அந்நாட்டின் வடக்கு மாகாணப்பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் வடக்கு மாகாணப் பகுதிக்கு தேர்தல் நடத்தப் பட்டு, முதலமைச்சராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். அவரும் வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என அதிபர் மகிந்த ராஜபக்சேயிடம் வலியுறுத்தி வருகின்றார்.
ஆனால், இது தொடர்பான அனைவரது கோரிக்கைகளையும் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் மகிந்த ராஜபக்சே. நாட்டின் பாதுகாப்பு கருதியே வடக்கு மாகாணத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்று ராஜபக்சே தொடர்ந்து கூறி வந்தார்.
இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் ராஜபக்சே. அப்போது அவர் பேசியதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்ட பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எனது அரசு போதிய நிவாரணத்தை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியது.
அதை தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற வற்புறுத்தலும் எழும்பியது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதை செய்யவும் முடியாது. இவ்வாறு மகிந்த ராஜபக்சே பேசியுள்ளார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications