இலங்கை போலீசால் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலைக்கு கண்டனம்- முழு அடைப்பால் வடமாகாணம் 'வெறிச்'
யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் 2 பேர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இலங்கை வடமாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்: இலங்கை போலீசாரால் 2 யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் வெறிச்சோடி காணப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்களை இலங்கை போலீசார் இனவெறியுடன் சுட்டுக் கொலை செய்தனர். ஆனால் மாணவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

பொதுமக்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் 2 மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது அம்பலமானது. இது தமிழர்களை கொந்தளிக்க வைத்தது.
இப்படுகொலையைக் கண்டித்து நேற்று மாணவர்கள் யாழ். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கை போலீசைக் கண்டித்து நடைபெற்ற இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் வடக்கு மாகாணம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மருந்து கடைகளைத் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்களும் இன்று செயல்படவில்லை.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் முழுவதுமாக இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications