இலங்கை போலீசால் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலைக்கு கண்டனம்- முழு அடைப்பால் வடமாகாணம் 'வெறிச்'
யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் 2 பேர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இலங்கை வடமாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்: இலங்கை போலீசாரால் 2 யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் வெறிச்சோடி காணப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்களை இலங்கை போலீசார் இனவெறியுடன் சுட்டுக் கொலை செய்தனர். ஆனால் மாணவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

பொதுமக்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் 2 மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது அம்பலமானது. இது தமிழர்களை கொந்தளிக்க வைத்தது.
இப்படுகொலையைக் கண்டித்து நேற்று மாணவர்கள் யாழ். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கை போலீசைக் கண்டித்து நடைபெற்ற இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் வடக்கு மாகாணம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மருந்து கடைகளைத் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்களும் இன்று செயல்படவில்லை.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் முழுவதுமாக இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications