இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. ரணில் அதிரடி!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விகரமசிங்கே வழங்கு தொடுக்க உள்ளார்.
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விகரமசிங்கே வழங்கு தொடுக்க உள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் அங்கு பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு நாடாளுமன்றமும் முடக்கப்பட்டு இருக்கிறது.

கலைப்பு
இதையடுத்து நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிக்கை வெளியிட்டார்.அங்கு பிரதமர் பதவிக்காக ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகியுள்ளது.

ஏன் நீக்கினார்
இலங்கையில் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டு இருந்தது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டு இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டு இருந்தது. சிறிசேனா கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதா காரணத்தால் ராஜபக்சே பிரதமராக மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. குதிரை பேரமும் படியவில்லை என்பதால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த சிறிசேனா முடிவெடுத்தார்.

நாளை வழக்கு
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விகரமசிங்கே வழங்கு தொடுக்க உள்ளார். அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாக வழக்கு தொடுக்க உள்ளார். அதிபர் சிறிசேனா, ராஜபக்சே ஆகியோரின் பெயரை நாளை இவர் மனுவில் குறிப்பிட உள்ளார்.

என்ன கோரிக்கை
இந்த நிலையில் ரணில் தனது மனுவில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறானது என்று உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார். அதிபர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைத்தது தேர்தலின் போது முறைகேடு நடக்க வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் உடனே நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications