விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி, அடையாள அட்டை மாயம் - அழிக்கப்பட்டு விட்டதா?
கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி மற்றும் அடையாள அட்டை மாயமானதாக சிங்களப் பத்திரிக்கையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். இவர் எப்போதும் தனது இடுப்பில் ‘கிளாக் 17' ரகத்தை சேர்ந்த அதிநவீன கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பார். 9 மி.மீ. ரகத்தை சேர்ந்த இந்த கைத்துப்பாக்கி மிகவும் விலை உயர்ந்ததாகும். இதைப்போல எம்.16 ஏ2 ரக துப்பாக்கி ஒன்றையும் தனது சிறப்பு ஆயுதமாக பிரபாகரன் பயன்படுத்தி வந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது, நந்திக்கடலில் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதிகட்ட போருக்குப்பின், விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றியதாக ஏராளமான ஆயுதங்களை ராணுவம் பார்வைக்கு வைத்தது. ஆனால், அப்போது மேற்கூறிய பிரபாகரனின் ஆயுதங்கள் குறித்து இலங்கை ராணுவம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
எனவே, இந்த ஆயுதங்கள் என்ன ஆனது என கேள்வி எழுந்துள்ளது. அவற்றை உயர் அதிகாரிகள் எடுத்துச் சென்று விட்டனரா அல்லது அவை அழிக்கப் பட்டு விட்டனவா என்ற மர்மம் நீடிக்கிறது. இதே போல், பிரபாகரன் அணிந்திருந்த இயக்க அடையாள அட்டையும் மாயமாகியுள்ளது.
இது தொடர்பாக சிங்களப் பத்திரிக்கையில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications