மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்... இலங்கை வடக்கு மாகாண முதல்வர் அறிவிப்பு
கொழும்பு: வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத் தெரிவித்துள்ளார் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்.
கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள்.
மோடியுடனான சந்திப்பின் போது இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். மேலும், இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் மோடி பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கொடுத்தனுப்பிய மனுவையும் தமிழ் எம்.பி.க்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட மோடி, அவர்களிடம் மூலம் விக்னேஸ்வரனை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கைத் திரும்பிய தமிழ் எம்.பி.க்கள் இது தொடர்பாக விக்னேஸ்வரனிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட விக்னேஸ்வரன், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்றும், அப்போது வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான இந்திய பிரதமரின் முறைப்படியான அழைப்பு கிடைத்தவுடன் தாம் உடனடியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications