நந்திக் கடலில் பொட்டு அம்மானை விட்டு விட்டு யுத்த களம் திரும்பிய பிரபாகரன்: பொன்சேகா 'புது குண்டு'
கொழும்பு: இலங்கை ராணுவத்துடனான இறுதி யுத்தத்தின் போது நடந்திக் கடலுக்கு பொட்டு அம்மானும் பிரபாகரனும்தான் சென்றனர்; ஆனால் பிரபாகரன் தனியே யுத்த களத்துக்கு திரும்பினார் என்று அப்போதைய இலங்கை ராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா புது தகவலை தெரிவித்திருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதியன்று யுத்தம் முடிவடைந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அன்றும் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்று அண்மையில் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இந்த நிலையில் பொட்டு அம்மான் குறித்தும் தற்போது சரத் பொன்சேகா தகவல்களை கூறியிருக்கிறார். இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பொன்சேகா,
இறுதி யுத்தத்தின் போது பிரபாகரனும் பொட்டு அம்மான் உள்ளிட்ட சிலரும் நந்திக் கடல் நோக்கி சென்றனர். ஆனால் பிரபாகரன் மட்டுமே யுத்த களத்துக்குத் திரும்பி வந்தார்.
இந்த தகவல் மட்டும் எங்களுக்கு தெரியும். அனேகமாக பொட்டு அம்மான் அங்கே உயிரிழந்திருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.
மேலும் பிரபாகரனை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தால் இப்போது கேபிக்கு வழங்கியிருக்கும் சலுகையை வழங்கியிருப்பார்கள்; அல்லது வடகிழக்கு முதல்வர் பதவியை கொடுத்திருப்பார்கள் என்றும் பொன்சேகா கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக பொட்டு அம்மான் தமிழகத்தில் குருடீ என்ற பெயரில் தலைமறைவாக இருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் பொன்சேகாவின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications