Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாக்குதல் வழக்கில் தேடப்பட்ட ராஜபக்சே ஆதரவாளர் செந்தில் தொண்டமான் சரண்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தபால் ஊழியர் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளரான ஊவா மாகாண அமைச்சரான செந்தில் தொண்டமான் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் மாகாணங்களில் ஒன்று ஊவா. இந்த மாகாண அமைச்சராக இருப்பவர் செந்தில் தொண்டமான்.

SL Police continue hunt Senthil Thondaman

இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர். தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் இலங்கையில் இருந்தபடியே ராஜபக்சே ஆதரவாளராக கலந்து கொண்டவரும் கூட.

செந்தில் மீது தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட உடனேயே செந்தில் தொண்டமான் தலைமறைவாகிவிட்டார்.

SL Police continue hunt Senthil Thondaman

செந்திலை இலங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் இந்தியா உட்பட வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடாமல் விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பண்டாரவெலா மாஜிஸ்திரேட் கோர்ட்டி்ல காலையில் சரணடைந்தார் செந்தில் தொண்டமான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+