'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்': பாலத்தை மீண்டும் கட்டுகிறது இலங்கை!
கொழும்பு: 'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்' ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
1957- இல் வெளியான திரைப்படம் 'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்'. இத்திரைப்படமானது மரண ரயில் பாதை என்று வரலாற்றின் பக்கங்கள் வருணிக்கும் தாய்லாந்து- பர்மா ரயில் பாதை பற்றியது.

தாய்லாந்து- பர்மா ரயில் பாதை
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் கை ஓங்கி இருந்த நிலையில் பர்மாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மரண ரயில் பாதை
இந்த ரயில் பாதையை கட்டமைக்க பிரிட்டிஷ் போர் கைதிகள் நிர்பந்திக்கப்பட்டனர். குறிப்பாக பல்லாயிரக்கணக்கான தமிழர்களை பலி கொண்டதுதான் இந்த மரண ரயில் பாதை.

பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்
இதை மையமாக வைத்து 1957ஆம் ஆண்டு பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என்ற பெயரில் ஆங்கிலத்தில் படமெடுக்கப்பட்டது.

இலங்கையில் படப்பிடிப்பு
இப்படம் 2 ஆண்டுகாலம் இலங்கையில் படமாக்கப்பட்டது. அத்திரைப்படத்தில் இடம் பெறும் பாலம் கடைசியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இத்திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது.

இன்றும் அறிவிப்பு பலகை
இலங்கையின் கேகாலை மாவட்டம், கித்துல்கலையில் 'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்' படம் இங்குதான் படமாக்கப்பட்டது என்ற அறிவிப்புப் பலகை இருக்கிறது.

மீண்டும் கட்டுகிறது இலங்கை
தற்போது இந்த பாலத்தை மீண்டும் கட்டுவது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

2ஆண்டில் கட்டிவிடலாம்
'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் படத்தில் காட்டப்பட்டது போலவே பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 2 ஆண்டுகாலத்தில் இந்த பாலத்தைக் கட்டி முடிப்போம் என்று இலங்கை மின்சார வாரிய தலைமை அதிகாரி கமல் லக்சிறீ கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications