இங்கிட்டு மோடி கிளம்பிய உடன் அங்கிட்டு சீனா நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி தரும்?
நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் நிறுத்த அனுமதி கோரி வருகிறது சீனா. ஆனால் மோடியின் பயணத்தால் அனுமதி தரும் முடிவை தெரிவிக்காமல் இருக்கிறது இலங்கை.
கொழும்பு: சீனா நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரியுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் பயணத்தால் அனுமதி தரும் முடிவை தெரிவிக்காமல் இருக்கிறது இலங்கை.
இலங்கையின் தென்பகுதியில் கொழும்பு, அம்பந்தோட்டா துறைமுகங்களில் சீனா நிலை கொண்டுள்ளது. ஈழத் தமிழரின் தாயக பிரதேசங்களான வடகிழக்கு மற்றும் இந்திய வம்சாவளியினரின் மலையகப் பகுதிகளில் இந்தியா பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவுக்கு செங்கம்பளம்
சீனாவுக்கு இலங்கை சிவப்புக் கம்பளம் விரிப்பது தொடர் கதையாகி வருகிறது. 2014-ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தவும் இலங்கை அரசு அனுமதி அளித்தது.

மோடி பயணம்
இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு அப்போது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இலங்கையில் பிரதமர் மோடி தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார்.

மீண்டும் அனுமதி
இப்போது மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்த இலங்கையிடம் சீனா அனுமதி கோரியுள்ளது. வரும் 16-ந் தேதியன்று சீனா நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புக்கு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசோ இதுவரை அனுமதி தராமல் மறுத்து வருகிறது.

அனுமதி தரும்?
பிரதமர் மோடியின் பயணம் முடிவடைந்த பின்னர் சீனாவுக்கு இலங்கை அனுமதி வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இலங்கையின் உண்மை முகம் அம்பலத்துக்கு வரும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications