மீன்பிடிக்க இந்தியர்களுக்கு தற்காலிக அனுமதி.. சாமி "கோரிக்கை" .. நிராகரித்தது இலங்கை!
கொழும்பு: இலங்கை கடற்பகுதியில் தற்காலிகமாக கூட மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று அந்த நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இலங்கை ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் "மன்னார் வளைகுடாவில் இந்திய கடல் எல்லை பகுதியில் தரமான மீன்களும், இறால்களும் இல்லாமல் போய்விட்டது. ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்காக மதிப்பு மிக்க மீன்களும், இறால்களும் இலங்கை கடற்பகுதி பக்கத்தில்தான் காணப்படுகின்றன. இந்திய கடல் பகுதியில் மீன்வளம் பெருகுவதற்கு 3 வருடங்கள் ஆகும். எனவே, அதுவரை இந்திய மீனவர்களை தற்காலிகமாக இலங்கையின் கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இது குறித்து இலங்கை அரசின் மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், "இதுபோன்றதொரு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை. மேலும் இந்த விஷயத்தில் எங்களை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது" என்றார்.
சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைக்கு மன்னார் மீன்பிடிப்போர் சம்மேளனமும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதால், எங்களின் வாழ்வாதாரமே அடியோடு அழிந்துபோய்விட்டது என்று இந்த சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்டின் சோய்சா குற்றம்சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications