முல்லைத்தீவில் பிரபாகரன் வாழ்ந்த பதுங்கு குழி தகர்ப்பு
யாழ்பாணம்: இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழியை அந்நாட்டு ராணுவம் வெடிவைத்துத் தகர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.
சுற்றுலா தலம்
அந்த பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பூமிக்கு அடியில் பாதுகாப்புடன் கோட்டை போல் அமைக்கப்பட்டு இருந்த அந்த பதுங்கு குழியை ஏராளமான பேர் சென்று பார்த்து வந்தனர். இதனால் அது சுற்றுலா தலம் போல் விளங்கியது.
குண்டு வைத்து தகர்ப்பு
இந்த நிலையில், அந்த பதுங்கு குழியை நேற்று முன்தினம் மாலை 6.40 அணி அளவில் ராணுவத்தினர் குண்டு வைத்து தகர்த்தனர்.
முன்னதாக, பதுங்கு குழியில் ஏராளமான வெடிபொருட்கள் இருப்பதாக கூறி, சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்று விடுமாறு ராணுவத்தினர் கேட்டுக் கொண்டனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். குண்டு வெடித்த சத்தம் பயங்கரமாக கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தகவலை கொழும்பு டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
கோவில் ஆகிவிடுமாம்
பிரபாகரனின் பதுங்கு குழியை அந்த பகுதி மக்கள் கோவில் ஆக்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில், ராணுவம் அதை தகர்த்து விட்டதாக அங்குள்ள தமிழர் தலைவர்கள் தெரிவித்தனர்.
எனினும், பிரபாகரனின் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று ராணுவம் மறுத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications