இலங்கை காட்டு யானைகள் குப்பைகளை உண்பதை தடுக்க சிறப்பு திட்டம்
காட்டு யானைகள் குப்பைகளை உண்ணுவதை தடுப்பதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை நடைமுறை படுத்துவதற்கான வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
யானைகள் பெரும் எண்ணிக்கையாக வசிக்கும் காட்டு பிரதேசங்களுக்கு அருகில் பாரிய அளவில் குப்பைகள் கொட்டப்படும் 54 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பெரேரா 300 மேற்பட்ட யானைகள் இந்த குப்பைகளை உணவாக எடுத்துகொள்வதாக தெரிவித்தார்.
குப்பைகளை உண்ணுவதன் காரணமாக யானைகளின் சுகாதாரத்திற்கு மட்டும்மல்ல அதன் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குப்பைகள் கொட்டப்படும் பிரதேசங்களுக்கு யானைகளுக்கு செல்ல முடியாத வகையில் மின்சார வேலிகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறை படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கூறிய அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மின்சார வேலிகளை அமைக்கும் பணிகளுக்காக விரைவில் ஆரம்பிப்பது குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்
ஆடையை எரித்த ஆப்கன் நட்சத்திரம்: மதத்தலைவர்களின் கண்டனம் காரணமா?
கத்தார் பிரச்சனை: பயணிகளுக்கு என்ன பாதிப்பு?
ராட்சத ராக்கெட்' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை













Click it and Unblock the Notifications