இலங்கை பிரதமர் ரணில் இன்று டெல்லி வருகிறார்… மோடியுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று டெல்லிக்கு வருகை தருகிறார். அவர் நாளை இந்தியப் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
கொழும்பு: இன்று டெல்லி வரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நாளை புதன்கிழமை சந்திக்கின்றார். அப்போது, இந்தியப் பிரதமர் மோடியுடன், இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா வருகின்றார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வருகிறார். பிரதமர் ரணிலுடன் அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மலிக் சமரவிக்கிரம, மற்றும் அதிகாரிகளும் வருகின்றார்கள்.

தாஜ் பேலஸ் விடுதியில் தங்க உள்ள இலங்கைப் பிரதமரை, இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நாளை காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாளை நண்பகல் ஹைதராபாத் இல்லத்துக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கைப் பிரதமர் ரணில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, மே மாதம் 11, 12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திருமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை அன்று ராஜஸ்தான் மாநிலம் செல்கிறார். திருமண நிகழ்வு ஒன்றுக்கு தனிப்பட்ட முறையில் செல்லும் ரணில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். அங்கிருந்து மீண்டும் ரணில் கொழும்பு செல்கிறார்.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications