இலங்கை பிரதமர் ரணில் இன்று டெல்லி வருகிறார்… மோடியுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று டெல்லிக்கு வருகை தருகிறார். அவர் நாளை இந்தியப் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
கொழும்பு: இன்று டெல்லி வரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நாளை புதன்கிழமை சந்திக்கின்றார். அப்போது, இந்தியப் பிரதமர் மோடியுடன், இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா வருகின்றார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வருகிறார். பிரதமர் ரணிலுடன் அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மலிக் சமரவிக்கிரம, மற்றும் அதிகாரிகளும் வருகின்றார்கள்.

தாஜ் பேலஸ் விடுதியில் தங்க உள்ள இலங்கைப் பிரதமரை, இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நாளை காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாளை நண்பகல் ஹைதராபாத் இல்லத்துக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கைப் பிரதமர் ரணில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, மே மாதம் 11, 12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திருமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை அன்று ராஜஸ்தான் மாநிலம் செல்கிறார். திருமண நிகழ்வு ஒன்றுக்கு தனிப்பட்ட முறையில் செல்லும் ரணில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். அங்கிருந்து மீண்டும் ரணில் கொழும்பு செல்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications