வன்னி மாவட்டத்தில் வாகை சூடியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
வவுனியா: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி கண்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 இடங்களில் 5ஐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றியை எட்டியுள்ளது.
இதேபோல் வடக்கு மாகாணத்தின் மற்றொரு மாவட்டமான வன்னியில் அனைத்து தொகுதிகளையுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அள்ளியிருக்கிறது.
வன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள்:
வன்னி மாவட்டம் - மன்னார் தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 58.18%
ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி - 27.35%
முஸ்லி்ம் காங்கிரஸ் - 6.07%
ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு- 5.57%
வன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 70.87%
ரணிலின் ஐ.தே.க. - 16.23%
ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு- 6.71%
வன்னி மாவட்டம் - வவுனியா தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 48.06%
ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு- 21.74%
ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி - 21.71%