Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாழ். பலாலியில் இருந்து விமான சேவை தொடங்குவதில் தாமதம்: இந்தியா மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்க தாமதமாவதற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டி இருக்கிறார்.

இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தமிழகத்தில் தஞ்சமடைந்து கொலை வழக்கில் சிக்கியவர். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். அந்நாட்டில் பெரும்பாலான அரசுகளில் அமைச்சராக வலம் வருபவர் டக்ளஸ் தேவான்ந்தா.

 Srilanka Minister Douglas Devananda blames India for delaying flight services

அண்மைக்காலமாக சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு எனப்படும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் இந்தியா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக சீனாவும் களமிறங்க முனைந்தது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பால் வடகிழக்கில் சீனா காலூன்ற முடியவில்லை.

அதேநேரத்தில் தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான மோதலை சீனாவுக்கு ஆதாயமாக்கித் தரும் முயற்சிகளில் டக்ளஸ் இறங்கினார். இதற்காக இலங்கைக்கான சீனா தூதரை வடக்கு பகுதிக்கு அழைத்துச் சென்று பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்க வைத்து சர்ச்சையில் சிக்கினார் டக்ளஸ்.

இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை தொடங்க முடியாமல் போனதற்கு இந்தியாதான் காரணம்; இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை உள்ளிட்டவைகள் இருப்பதால் இந்த விமான சேவை தொடங்கப்படவில்லை என்றார் டக்ளஸ் தேவானந்தா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+