இந்தியா எதுக்கு தலையிடனும்? இலங்கையில் இனப்பிரச்சனை இல்லையே! சொல்வது 'சீனா வாய்ஸ்' டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழருக்கு இனப் பிரச்சனை என்பதே இல்லை என்கிற போது இந்தியா ஏன் தலையிட வேண்டும் என்று இலங்கை அமைச்சரும் சீனாவின் ஆதரவாளருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது: ஈழத் தமிழ் மக்களுக்கு இன ரீதியான பிரச்னைகள் இலங்கையில் இருப்பதாக நான் கருதவில்லை. நியாயமான பிரச்னைகள் இருந்தால் அவற்றுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் போது இலங்கை ராணுவத்தினருக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும்.

இனப்பிரச்சனையே இல்லை
மனித உரிமைகள் உள்ளிட்டவைகளை தமிழ் அரசியல் கட்சிகள்தான் பேசி பேசி பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றன. இலங்கை தமிழ் ஊடகங்களும் மக்களிடம் சரியான தகவல்களை சேர்க்கவில்லை. இலங்கையில் இப்போது இனப்பிரச்சனை என்பதே கிடையாது. இலங்கையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை. அதிகாரப் பகிர்வுகளுக்கு இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபை முறைமையை முழுமையாக சிறந்த தீர்வாக அமையும்.

பொதுவான நினைவு நாள்
இலங்கையில் யுத்த காலத்தில் மரணித்த அனைவரையும் நினைவுகூர பொதுவான ஒரு நாள், பொதுவான இடம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் யுத்த காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்யலாம். உரிய இறப்புச் சான்றிதழ்களை வழங்கலாம். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்தியா இலங்கை ஒப்பந்தம்
ஈழத் தமிழர் பிரச்சனையை மையமாக வைத்த் 1989-ல் இந்தியா- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இதனை நடைமுறைப்படுத்துவதுதான் இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும்.

சீனாவின் குரலாக டக்ளஸ்
பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி ஈழத் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் என்பது ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால் சீனா ஆதரவாளராக உருமாறிவிட்ட டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்; ஈழத் தமிழ் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications